100 நாள் வேலை திட்டத்தில் ஐந்து மாத ஊதியம் நிலுவை – மனுவுடன் முற்றுகை போராட்டம்

X
By - Nandhinis Sub-Editor |7 May 2025 10:40 AM IST
ஐந்து மாத நிலுவை ஊதியத்தை, 0.05 சதவீகிதத்தின் சட்டப்படி வட்டியுடன் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்
100 நாள் வேலைத் திட்டத்தின் ஊதியம் உடனே வழங்கப்பட வேண்டும்– தொழிலாளர்களின் வலியுறுத்தல்
பவானி அருகே சித்தோட்டில் உள்ள பேரோடு பஞ்சாயத்து அலுவலகத்தை, 100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள், நிலுவை ஊதியங்களை வட்டியுடன் வழங்க வேண்டும் மற்றும் அனைவருக்கும் வேலை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் நேற்று முற்றுகையிட்டனர்.
ஈரோடு பி.டி.ஓ. கலைவாணியின் ஆலோசனையின் பேரில், தொழிலாளர்கள் கோரிக்கைகளை மனுவாக எழுதி வழங்கினர். அரசு கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என உறுதி அளித்ததையடுத்து அவர்கள் அமைதியாக கலைந்தனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu