ஏலச்சீட்டு மோசடி! ஒரே குடும்பம் ஒரு கோடி மோசடி!பைனான்ஸ் தொழிலாளியின் நாடகம் வெடித்தது!

ஏலச்சீட்டு மோசடி! ஒரே குடும்பம் ஒரு கோடி மோசடி!பைனான்ஸ் தொழிலாளியின் நாடகம் வெடித்தது!
X
பெரியசேமூரை சேர்ந்த பாலு மற்றும் குமாரிடம் ₹7.49 லட்சம் ரூபாய் மோசடி செய்ததுடன், மேலும் 40க்கும் மேற்பட்ட நபர்களிடம் ₹1 கோடிக்கும் மேல் மோசடி செய்துள்ளனர்.

ஏலச்சீட்டு மோசடி: தலைமை குற்றவாளி அழகர்சாமி நீதிமன்றத்தில் சரணடைப்பு – போலீஸ் கஸ்டடிக்கு விண்ணப்பம் :

ஈரோடு: ஈரோடு கொங்கம்பாளையத்தை சேர்ந்த பைனான்ஸ் தொழிலாளி அழகர்சாமி (46) மற்றும் அவரது மகள் மாரியம்மாள் (26) நடத்திய ஏலச்சீட்டு மோசடியில், பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

பெரியசேமூரை சேர்ந்த பாலு மற்றும் குமாரிடம் ₹7.49 லட்சம் ரூபாய் மோசடி செய்ததுடன், மேலும் 40க்கும் மேற்பட்ட நபர்களிடம் ₹1 கோடிக்கும் மேல் மோசடி செய்துள்ளனர்.

மகள் மாரியம்மாள் பிப்ரவரி 10ஆம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த அழகர்சாமி சமீபத்தில் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்நிலையில், போலீசார் அவரை காவல்துறை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்திடம் அனுமதி கோர உள்ளனர்.

Tags

Next Story