கொங்கு கலைக் கல்லூரி மாணவர்கள் ரூ.25,000 ரொக்க பரிசு வென்று சாதனை

கொங்கு கலைக் கல்லூரி மாணவர்கள் ரூ.25,000 ரொக்க பரிசு வென்று சாதனை
X
சுற்றுச்சூழல் சவால்களை மையமாக கொண்ட தங்களின் புதுமையான ஸ்டார்ட் அப் யோசனை மூலம் பரிசுகள் குவிந்தது

ஈரோடு கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு உயிர் தொழில்நுட்பவியல் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் ஹரி பிரசாத் மற்றும் கவுதம், சுற்றுச்சூழல் சவால்களை மையமாக கொண்ட தங்களின் புதுமையான ஸ்டார்ட் அப் யோசனை மூலம் பரிசுகளை குவித்துள்ளனர்.

கோவை குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்ற சுற்றுச்சூழல் கருப்பொருள்கள் அடிப்படையிலான ஸ்டார்ட் அப் போட்டியில், இந்த இருவரும் பங்கேற்றனர். பிளாஸ்டிக் கழிவுகளை நுண்ணுயிரிகள் மூலம் சிதைத்து, பசுமை பிளாஸ்டிக் பொருட்களாக மாற்றும் யோசனை, கழிவு மேலாண்மை பிரிவில் சிறப்பாக அங்கீகரிக்கப்பட்டது.

இத்திட்டத்திற்கு ஊக்கமளிக்க, ஸ்டார்ட்-அப் டி.என். மூலம் ரூ.25,000 ரொக்க ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. அவர்களின் இந்த சாதனையை பாராட்டி, KVIT அறக்கட்டளை, கல்லூரித் தாளாளர் திரு. தங்கவேல், முதல்வர் வாசுதேவன், துறை தலைவர் சரவணன் மற்றும் கற்றல் வழிகாட்டிய ஆசிரியர்கள், இரு மாணவர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

சுற்றுச்சூழல் மேம்பாட்டில் புதிய யோசனைகளுடன் களமிறங்கிய இம்மாணவர்கள், பசுமை எதிர்காலத்திற்கான இளம்பெண்கள் தூதர்களாக திகழ்கிறார்கள்.

Tags

Next Story