முதல்வர் வீட்டில் நகை திருட்டு

முதல்வர் வீட்டில் நகை திருட்டு
X
முதல்வர் வீட்டில் நடந்த திருட்டு, தற்போது வரை 5 பேர் கைது

முதல்வர் வீட்டில் திருட்டு தனியார் ஊழியர் கைது

ஆத்துார் அருகே வடசென்னிமலையைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் அரசு கல்லூரி முதல்வராக பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டில் கடந்த ஜனவரி 24ஆம் தேதி மர்ம நபர்கள் புகுந்து 25 பவுன் நகைகளைத் திருடிச் சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக ஆத்துார் ஊரக போலீசார் விசாரணை மேற்கொண்டு நான்கு பேரைக் கைது செய்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான செங்கல்பட்டைச் சேர்ந்த ரவுடி 'சுக்குகாபி' சுரேஷ் (26) கொலை வழக்கில் புழல் சிறையில் இருந்ததால், அவரை இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். அவ்விசாரணையில், செங்கல்பட்டு வல்லத்தைச் சேர்ந்த, தனியார் கார் நிறுவனத்தில் பெயின்ட் அடிக்கும் வேலை செய்யும் சஞ்சய் (23) என்பவரும் இத்திருட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. நேற்று சஞ்சயை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து ஒன்றரை பவுன் நகை பறிமுதல் செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Tags

Next Story