பண்ணாரி அம்மன் கோவிலில் நேற்று மஞ்சள் நீராட்டு விழா

X
By - Nandhinis Sub-Editor |11 April 2025 3:20 PM IST
சத்தியமங்கலத்தில் உள்ள பண்ணாரி அம்மன் கோவிலில் நேற்று மஞ்சள் நீராட்டு விழா பக்தி பெருக்கத்துடன் நடைபெற்றது
சத்தியமங்கலத்தில் உள்ள பண்ணாரி அம்மன் கோவிலில் நேற்று மஞ்சள் நீராட்டு விழா பக்தி பெருக்கத்துடன் நடைபெற்றது. விழாவுக்கு முன்னதாக, அம்மன் உற்சவர் புஷ்பரதத்தில் திருவீதி உலா வந்தார். பின்னர், சப்பரத்தில் அம்மன் கோவில் முழுவதும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து சேவித்தனர்.
இதற்கிடையில், கோவிலில் உள்ள உண்டியல் எண்ணும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பரம்பரை அறங்காவலர், வங்கி அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து பணிபுரிந்தனர். உண்டியலிலிருந்து ரூ.1.03 கோடி ரொக்கம், 217 கிராம் தங்கம் மற்றும் 839 கிராம் வெள்ளி காணிக்கையாக சேகரிக்கப்பட்டது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu