ஆத்தூர் திரவுபதி அம்மன் கோவிலில் தீர்த்தக்குட ஊர்வலம்

ஆத்தூர் திரவுபதி அம்மன் கோவிலில் தீர்த்தக்குட ஊர்வலம்
X
சேலம் மாவட்டம் ஆத்தூர் திரவுபதி அம்மன் கோவிலில் 1,500 குடங்கள் கொண்டு நடந்த தீர்த்தக்குட ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது

ஆத்தூரில் திரவுபதி அம்மன் கோவிலில் தீர்த்தக்குட ஊர்வலம் விமரிசையாக நடைபெற்றது

ஆத்தூர் தாயுமானவர் தெருவில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் தேர் திருவிழாவை ஒட்டி, தீர்த்தக்குட ஊர்வலம் நேற்று சிறப்பாக நடைபெற்றது. இதில், கங்கை, யமுனை, சரஸ்வதி, காவிரி உள்ளிட்ட புனித நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்த நீர்களை, 1,500க்கும் மேற்பட்ட குடங்களில் ஏந்திய பக்தர்கள், நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர்.

பின்னர், அந்த புனித தீர்த்தங்களை மூலவர் திரவுபதி அம்மன் மீது ஊற்றி அபிஷேகம் செய்து பக்திகள் வழிபட்டனர். திருமண தடை நீங்க, குழந்தைப் பேறு கிடைக்க என பலவிதமான மனோரதங்களுடன் பக்தர்கள் நேர்த்திக்கடன்கள் செலுத்தினர். அந்த நேரத்தில், மூலவர் அம்மன், கோமதி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

தீர்த்தக்குடம் சுமந்து வந்த பக்தர்களுக்கு, மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. விழாவைத் தொடர்ந்து, தி.மு.க. மாவட்ட பொருளாளர் மற்றும் திருப்பணிக் குழுத் தலைவர் ஸ்ரீராம், ஆத்தூர் துளுவ வேளாளர் மகாஜன மன்றத் தலைவர் கண்ணன் உள்ளிட்டோர் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த திருவிழா உங்கள் பகுதியிலும் நடந்திருக்கிறதா?

Tags

Next Story