பெருந்துறையில் 273 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு

பெருந்துறை: கொங்கு வேளாளர் கல்வி அறக்கட்டைையின் கீழ் செயல்படும் பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான பிரிவுபசார விழா மற்றும் வேலைவாய்ப்பு நியமன ஆணை வழங்கும் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
விழாவுக்கு அறக்கட்டளை தலைவர் குமாரசாமி தலைமை வகித்தார். பாலிடெக்னிக் தாளாளர் வெங்கடாச்சலம் முன்னிலை வகிக்க, கல்லூரி முதல்வர் வேதகிரி ஈஸ்வரன் வரவேற்று பேசினார்.
சிறப்பு விருந்தினராக சென்னை பிரேக்ஸ் இந்தியா நிறுவன ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். மேலும், தனது உரையில் தொழில்துறையில் மாணவர்கள் திகழ வேண்டிய முக்கியத்துவம் குறித்து வழிகாட்டினார்.
இவ்விழாவில் மூன்றாம் ஆண்டு பட்டயப் படிப்பில் பயின்ற 273 மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு முன்னணி நிறுவனங்களில் பணியிடம் கிடைத்ததைக் கொண்டாடும் வகையில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
இதையடுத்து, ஈரோடு கொங்கு நேஷனல் மெட்ரிக் தாளாளர் தேவராஜா, பிரேக்ஸ் இந்தியா மேலாளர் கிறிஸ்டோபர், துணை முதல்வர் செந்தில்குமார் மற்றும் கொங்கு ஐ.டி.ஐ. முதல்வர் தினேஷ்குமார் உள்ளிட்ட பலர் விழாவில் கலந்துகொண்டு மாணவர்களை வாழ்த்தினர்.
இந்த விழா, மாணவர்களுக்கு எதிர்காலத்தை உருவாக்கும் ஒரு முக்கியமான கட்டமாக அமைந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu