குறிஞ்சி பைனான்ஸ் நிறுவன அதிபர் கைது

குறிஞ்சி பைனான்ஸ் நிறுவன அதிபர் கைது
சேலம் மாவட்டம் மேட்டூர் அணை பகுதியில் பலரை ஏமாற்றிய நிதி நிறுவன அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேட்டூரை சேர்ந்த 32 வயதான ஸ்ரீகாந்த், லாரி டிரான்ஸ்போர்ட் தொழிலில் ஈடுபட்டவர். இவர், விருதாசலம்பட்டியை சேர்ந்த 63 வயதான ராமசாமி என்ற நபர் நடத்தி வந்த "குறிஞ்சி பைனான்ஸ்" எனும் நிதி நிறுவனத்தில், உயர்ந்த வட்டி வாக்குறுதியால் ஈர்க்கப்பட்டு, ₹48.79 லட்சம் முதலீடு செய்திருந்தார். ராமசாமி, முதலீடு செய்தவர்களுக்கு 15 சதவீதம் வட்டி அளிக்கப்படுமென சொல்லி நம்பிக்கை அளித்திருந்தார். ஆனால், நிதியிலும் வட்டியிலும் எதுவும் திருப்பி தராமல் ஏமாற்றியதை அறிந்த ஸ்ரீகாந்த், பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டதில், ராமசாமி பலரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. தொடர்ச்சியாக வந்த புகார்களின் அடிப்படையில், குறிஞ்சி பைனான்ஸ் நிறுவன அதிபர் ராமசாமியை போலீசார் நேற்று கைது செய்தனர். தற்போது இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாற்றமடைந்த மற்றவர்களும், தங்களது அசல் ஆவணங்கள் மற்றும் அடையாள அட்டையுடன் நேரில் வந்து புகார் அளிக்கலாம் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் நிதி நிறுவனங்களின் மீது மக்களிடையே நம்பிக்கைக்குறிய நிலையை உருவாக்கியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu