அந்தியூரில் பத்ரகாளியம்மன் குண்டம் விழா

அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் நடைபெறும் ஆண்டுபெருவிழாவின் ஒரு பகுதியாக, குண்டம் விழா நேற்று முன்தினம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதித்து, நேர்த்திக்கடன்களை செலுத்தினர். பக்திபரவசத்துடன் நடைபெற்ற இந்த விழா, பக்தர்களின் விசுவாசத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்தது.
இந்நிலையில், இன்று (ஏப்ரல் 11) மாலை 5:00 மணிக்கு அந்தியூரில் தேரோட்டம் வெகு விமர்சையாக தொடங்குகிறது. இந்த விழாவை எம்.எல்.ஏ வெங்கடாசலம், அந்தியூர் தாசில்தார் மற்றும் பலர் இணைந்து தொடங்கி வைக்க உள்ளனர். இன்று தொடங்கும் தேரோட்டம் ஏப்ரல் 14ஆம் தேதி வரை நாள்தோறும் நடைபெற உள்ளது. கோவில் வளாகம் மற்றும் அந்தியூர் சுற்றுப்புறங்கள், விழா அம்சங்களால் உற்சவமயமாக மாறியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu