திடீரென காணாமல் போன பெண்மணி

X
By - Nandhinis Sub-Editor |3 May 2025 10:20 AM IST
கடந்த மே 1 ஆம் தேதி அதிகாலை 4:00 மணி அளவில் வீட்டை விட்டுச் சென்ற மனைவி, வீடு திரும்பாததால் கணவர் போலீஸில் புகார் கொடுத்தார்.
மனைவி மாயம்
கவுந்தப்பாடி அருகே பெரியபுலியூர் கிராமத்தில் வசித்து வரும் சின்னராஜ் (வயது 43), அந்த பகுதியில் ஒரு டீக்கடை நடத்தி வருகிறார். அவரது மனைவி பூமதி (36), கடந்த மே 1 ஆம் தேதி அதிகாலை 4:00 மணி அளவில் வீடு விட்டுச் சென்றதிலிருந்து காணாமல் போயுள்ளார்.
தொடர்ந்து, குடும்பத்தினர் உறவினர்கள் வீடுகளும், சுற்றுப்புறமும் நாடி தேடியும், பூமதி எங்கு சென்றார் என்ற தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில், மனமுடைந்த சின்னராஜ், கவுந்தப்பாடி போலீஸில் புகார் கொடுத்தார்.
புகாரை பெற்ற போலீசார், மாயமான பூமதியின் அறிகுறிகளை உறுதிப்படுத்தி, அக்கம்பக்க பகுதிகளில் விசாரணையும் தேடலையும் ஆரம்பித்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறை தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu