உலக செவிலியர் தினம் – ஈரோடு அரசு மருத்துவமனையில் உற்சாக விழா!

பசுமை புனிதம் தரும் செவிலியர் பணிக்கு மரியாதை செலுத்தும் நாள்:
ஈரோடு:
மனிதநேயத்தின் அடையாளமாக கருதப்படும் செவிலியர்கள் பணியாற்றும் சேவையை கௌரவிக்கும் வகையில், உலக செவிலியர் தினம் ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உணர்வுபூர்வமாகக் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வுக்கு மாவட்ட இணை இயக்குனர் (மருத்துவ பணிகள்) சாந்தகுமாரி தலைமை வகித்தார்.
நிகழ்வின் தொடக்கமாக டாக்டர் வேதமணி மற்றும் ஒருங்கிணைப்பாளர் சகிலா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கினர். தொடர்ந்து, மருத்துவமனை கண்காணிப்பாளர் வெங்கடேஷ், உறைவிட மருத்துவர் சசிரேகா, மற்றும் செவிலியர் சங்க உறுப்பினர்கள் உஷா, சரளா, ஜெகருன்ஷா, ப்ரத்தா, வளர்மதி, லோகேஸ்வரி ஆகியோர் தங்களின் உரைகளில் செவிலியர் சேவையின் முக்கியத்துவத்தையும், சமூக நலனுக்கான பங்களிப்பையும் எடுத்துரைத்தனர்.
இந்நாளில், மருத்துவர்கள் செவிலியர்களுக்கு ரோஜாப்பூக்கள், இனிப்புகள் வழங்கப்பட்டன. அவர்கள், நாம் நேரம் பார்த்து சேவை செய்யும் அல்ல, நேசித்து சேவை செய்யும் வீரர்கள்” என புகழாரம் சூட்டினர். இத்துடன், அனைத்து செவிலியர்களும் சமூக நலனுக்காக உறுதிமொழி ஏற்றனர்.
மே 12ஆம் தேதி உலகெங்கும் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த நாளை நினைவுகூர்ந்து, உலக செவிலியர் தினமாக கொண்டாடப்படுவதையும், ஈரோடு மருத்துவமனை விழா அதை உணர்வோடு முன்னெடுத்ததையும் மக்கள் பாராட்டினர்.
அதே நாளில், பவானி அரசு மருத்துவமனையிலும் செவிலியர்கள் கேக் வெட்டி, ஒருவருக்கொருவர் வாழ்த்துகள் தெரிவித்து உறுதிமொழி ஏற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu