2025-ல் டிஜிட்டல் பாசன கணக்கெடுப்பு தொடக்கம்– ஈரோட்டில் கலெக்டர் உரை!

டிஜிட்டல் சிறுபாசன கணக்கெடுப்பு பயிற்சி ஈரோட்டில்: நீர் வள மேம்பாட்டுக்கான புதிய பருவம் தொடக்கம்:
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் ஏழாவது சிறுபாசன கணக்கெடுப்பு பற்றிய மாவட்ட அளவிலான குழுக் கூட்டம் மற்றும் பயிற்சி வகுப்பு நேற்று சிறப்பாக நடைபெற்றது. இதில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையிலான அதிகாரிகள் கலந்துகொண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டனர்.
கலெக்டர் பேசியதாவது, கிணறு, ஆழ்துளை கிணறு, குளம், குட்டை, ஏரி, தடுப்பணை, நிலத்தடி நீர் சேமிப்பு திட்டங்கள், நீரேற்று பாசன திட்டங்கள் உள்ளிட்ட சிறுபாசன ஆதாரங்களை கணக்கெடுக்கும் முயற்சியாக இது நடைபெறுகிறது. இதன் மூலம் தரமான புள்ளிவிபரங்களை திரட்டி, நீர் வளங்களை மேம்படுத்துவது முக்கிய நோக்கமாகும், என்றார்.
இது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கணக்கெடுப்பு நடவடிக்கையாகும். கடந்த ஆறாவது கணக்கெடுப்பு 2017-2019ம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது.
இந்த முறையாக நடைபெற உள்ள தற்போதைய கணக்கெடுப்பு, முழுமையாக டிஜிட்டல் முறையில், நாட்டின் தகவல் மைய செயலியின் (NIC App) வழியாக செல்போன் மூலம் மேற்கொள்ளப்படவுள்ளது. கிராமப்புறங்களில் வி.ஏ.ஓ.க்கள் மற்றும் நகரப்புறங்களில் உள்ளாட்சி அமைப்புப் பணியாளர்கள் இதில் பணியாற்ற உள்ளனர். இதை வருவாய், புள்ளியியல் மற்றும் நகர்புற உள்ளாட்சி துறை அதிகாரிகள் மேற்பார்வை செய்கின்றனர்.
மக்கள் நேர்மையான தகவல்களை வழங்கி ஒத்துழைக்க வேண்டும் என கலெக்டர் கேட்டுக்கொண்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu