கலெக்டர் நேரில் சென்று பதில்

ஈரோடு மாவட்டத்தின் அந்தியூர் தாலுகா பர்கூர் மலைப்பகுதி கத்திரிமலையில் கடந்த நாட்களில் மனுநீதி நாள் முகாம் மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, 31 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, அங்குள்ள பழங்குடியினரை நேரில் சந்தித்து, குறைகளை கேட்டறிந்தார். சாலை வசதி இல்லாத மலைப்பகுதியில், கலெக்டர் மற்றும் அதிகாரிகள் 5 கி.மீ. டிராக்டரில் பயணித்து, பின்னர் 3 கி.மீ. மலைப்பாதை வழியாக நடந்தே சென்றனர்.
அங்கு உள்ள பள்ளியில் மாணவர்களுடன் கலந்துரையாடிய கலெக்டர், அரசு வீடுகளுக்கான பணிகளை பார்வையிட்டார். மருத்துவ முகாமில், பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டது. 3,500 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த புலிகள் குடியிருக்கும் மலைக் கிராமங்களுக்கு இது போன்ற நேரடி நடவடிக்கைகள், மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu