சேலத்தில் 400 மாணவர்களுக்கு அடித்த ஜேக்பேட்

சேலத்தில் 400 பேருக்கு பணி ஆணை
சேலம் அரசு கலைக்கல்லூரியில் நேற்று மாணவர் வேலை வாய்ப்பு மற்றும் முன்னேற்ற குழுமத்தின் சார்பில் வேலை வாய்ப்பு முகாம் சிறப்பாக நடைபெற்றது. இந்த முகாமை கல்லூரி முதல்வர் செண்பலெட்சுமி திறந்து வைத்தார். இதில் கல்லூரியின் இறுதியாண்டு மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களும் ஆவலுடன் கலந்து கொண்டனர். வேலை வாய்ப்பு முகாமில் நாடு முழுவதும் இருந்து வந்த 30 முன்னணி நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான தகுதி மற்றும் திறமை கொண்ட வேலையை தேர்வு செய்தன. கல்வித் தகுதியை அடிப்படையாகக் கொண்டு, 400 மாணவ, மாணவியர்கள் தேர்வாகி, அவர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன. முதல்வர் அவர்களே நேரில் இந்த ஆணைகளை வழங்கி, மாணவர்களை பாராட்டி ஊக்கமளித்தார். இந்த விழாவில் பேராசிரியர்கள் திருமுருகன், சுரேஷ்பாபு, சரவணகுமார், பானுமதி, கண்ணன் மற்றும் வேலைவாய்ப்பு வழங்கிய நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். இந்த முகாம், மாணவர்கள் எதிர்காலத்துக்கு திடமான அடித்தளமாக அமைந்ததுடன், கல்லூரியின் சிறப்பான வளர்ச்சியின் ஒரு மைல் கல்லாகவும் கருதப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu