அழுகிய நிலையில் மீட்கப்பட்ட தம்பதியின் உடல்

அழுகிய நிலையில் மீட்கப்பட்ட தம்பதியின் உடல்
X
சிவகிரி அருகே, விளக்கேத்தி மேக்கரையான் தோட்டத்தில் கொடூர கொலைச் சம்பவம் மக்கள் மனதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடில் இருவர் கொடூரக் கொலை :

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே, விளக்கேத்தி மேக்கரையான் தோட்டத்தில் கொடூர கொலைச் சம்பவம் மக்கள் மனதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனியாக வாழ்ந்து வந்த முதிய தம்பதி ராமசாமி (75) மற்றும் அவரது மனைவி பாக்கியம்மாள் (65) ஆகியோர், மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டனர்.

தோட்டத்திலேயே வீடு அமைத்து வாழ்ந்த தம்பதியர், இரண்டு நாட்களாக பிள்ளைகளின் அழைப்பை ஏற்கவில்லை. சந்தேகத்துடன், பக்கத்து வீட்டு வாசிகள் வீட்டை சென்று பார்த்தபோது, ராமசாமி வீட்டுக்குள் மற்றும் பாக்கியம்மாள் வீட்டு வெளியில் சடலமாக கிடந்தது தெரியவந்தது. இரண்டு உடல்களும் பல நாட்களாக அழுகிய நிலையில் இருந்தன.

மர்ம நபர்கள், பாக்கியம்மாள் அணிந்திருந்த 10.5 சவரன் நகையையும், பீரோவில் இருந்த 1.50 லட்சம் ரூபாயையும் கொள்ளையடித்துவிட்டதாக போலீசார் உறுதி செய்துள்ளனர். சம்பவம் குறித்து நான்கு நாட்களுக்கு முன் நடந்திருக்கலாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தொடர்ந்து போலீசார் விசாரணையை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். ஏ.டி.எஸ்.பி. விவேகானந்தன் தலைமையில் 8 விசாரணை குழுக்கள் அமைக்கப்பட்டு, சிசிடிவி பதிவுகள் அலசப்பட்டு வருகின்றன.

இக்கொலை சம்பவம் கொங்கு மண்டலத்தில் தொடரும் மூத்த குடிமக்கள் குறித்த குற்றச்செயல்களின் தொடரை ஒட்டுமொத்தமாக வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. பொதுமக்கள் இரவிலும் நிம்மதியாக உறங்க முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது.

Tags

Next Story