திருநாவுக்கரசர் நாயனார் குருபூஜை

குருபூஜை விழா
கெங்கவல்லி: தேவாரப் பாடல்களைப் பாடிய சிறப்புமிக்க நாயன்மார்களுள் ஒருவரான திருநாவுக்கரசு நாயனார், 77 வயதுக்குப் பிறகும் ஏராளமான சிவன் கோவில்களுக்கு நடந்து சென்றே தொண்டாற்றி, நிறைய பாடல்களைப் பாடியவர் ஆவார். இவர் பிறந்த சித்திரை சதய நட்சத்திர தினமான நேற்று, தம்மம்பட்டி காசி விஸ்வநாதர் கோவிலில் சிவனடியார்கள் சார்பில் அவருக்கு குருபூஜை விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் சிவனடியார்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து தேவாரப் பாடல்களை இனிமையாகப் பாடி மகிழ்ந்தனர். திருநாவுக்கரசர் சிலைக்கு சிறப்பு அபிஷேகமும், பூஜையும் செய்யப்பட்டு, அனைத்துப் பக்தர்களுக்கும் அறுசுவை உணவு பிரசாதமாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் நிறைவில் பள்ளியறை பூஜையும் சிறப்பாக நடைபெற்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu