பண்ணை வீட்டில் 11 மாதமாக அடைத்து வேலை வாங்கிய கொடூரம்

பண்ணை வீட்டில் 11 மாதமாக அடைத்து வேலை வாங்கிய கொடூரம்
X
ஈரோட்டில் பண்ணை வீட்டில் 11 மாதமாக அடைத்து வேலை வாங்கி, சம்பளம் தராமல் தம்பதியரையும் குழந்தையையும் விரட்டிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது

ஈரோட்டில் பண்ணை வீட்டில் 11 மாதமாக அடைத்து வேலை வாங்கிய கொடூரம் – சம்பளம் தராமல் தம்பதியரையும் குழந்தையையும் விரட்டிய அதிர்ச்சி சம்பவம்

ஈரோடு: தர்மபுரியை சேர்ந்த ஒரு குடும்பம், வேலை வாய்ப்புக்காக ஈரோட்டில் ஒரு பண்ணை வீட்டுக்குள் 11 மாதமாக அடைத்து வைக்கப்பட்டதாக பரிதாபமான புகார் எழுந்துள்ளது. சம்பளம் தரப்படவில்லை. தற்போது அவர்கள் நீதிக்காக கலெக்டர் அலுவலகம் வரை வந்துள்ளனர்.

பாப்பிரெட்டிபட்டியை சேர்ந்த ரவி (35) மற்றும் மணிமேகலை (30) தம்பதியருடன், 13 வயது மகன் ரோகித் மற்றும் 1½ வயது குழந்தையும் உள்ளனர். அவர்கள் அளித்த மனுவில் கூறியது:

"ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள பண்ணை வீட்டில், கடந்த ஆண்டு ஏப்ரலில் வேலைக்காக அழைத்து சென்றனர். மாத சம்பளமாக ₹25,000 என கூறப்பட்டதாலும் நாங்கள் கூலியாக வேலை ஏற்றுக்கொண்டோம். வீட்டு வேலை, தோட்ட வேலை என அனைத்தும் செய்தோம். ஆனால் முழு சம்பளம் தராமல், அவ்வப்போது ₹4,000, ₹5,000 மட்டும் கொடுத்தனர்."

மேலும்,

"மகன் ரோகித் கூட வேலை செய்தால்தான் பணம் தருவோம் என கூறி, அவரையும் பள்ளிக்கு அனுப்பாமல் வேலைக்கு வைத்தனர். இரண்டுமாதமாக விடுவிக்குமாறு கேட்டோம். ஆனால் தாக்கியதும், போலீசில் புகார் கொடுத்ததும் நடந்தது. தற்போது நீதிக்காக கலெக்டர் அலுவலகம் வரை வந்துள்ளோம்.

இதை அடுத்து, ஈரோடு கலெக்டர் அலுவலகம், அம்மாபேட்டை போலீசாரை தொடர்பு கொண்டு, வீடியோ ஆதாரங்களை வைத்து வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது. ஆனால் பாதிக்கப்பட்ட தம்பதியர், வழக்கு வேண்டாம், எங்கள் சம்பளத்தை மட்டும் பெற்றுத்தருங்கள் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story