ரயிலில் ரகசியமாக கடத்தி வரப்பட்ட 28 கிலோ குட்கா போலீசாரால் பறிமுதல்

ரயிலில் ரகசியமாக கடத்தி வரப்பட்ட 28 கிலோ குட்கா போலீசாரால் பறிமுதல்
X
ரயில்வே போலீசார் ரயிலின் அனைத்து பெட்டிகளிலும் சோதனை மேற்கொண்ட போது ஒரு பேகில் 28 கிலோ எடை கொண்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்தனர்

ரயிலில் கடத்தி வரப்பட்ட 28 கிலோ குட்கா போலீசாரால் பறிமுதல்

ஈரோடு ரயில்வே நிலையத்தில், டாடா நகர் (ஆந்திரா) – எர்ணாகுளம் (கேரளா) இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் இரவு பிளாட்பார்ம்-2ல் நின்றது. இந்த நேரத்தில் ரயில்வே போலீசார் ரயிலின் அனைத்து பெட்டிகளிலும் சோதனை மேற்கொண்டனர்.

பொது பயணிகள் பெட்டியில் கேட்பாரற்று கிடந்த ஒரு பேக்கை போலீசார் சோதனை செய்தனர். அதில் 28 கிலோ எடை கொண்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் சட்டவிரோதமாக இருப்பது தெரியவந்தது. உரிமையாளர் எவரும் முன்னிலையிலேயே வரவில்லை.

இதையடுத்து, அந்த பேக்கை போலீசார் பறிமுதல் செய்து, அதனை சூரம்பட்டி காவல் நிலையத்துக்கு ஒப்படைத்தனர். தற்போது, சூரம்பட்டி போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story