அதிவேகமாக ஓடிய பேருந்தை சிறை பிடித்த மக்கள்

X
By - Gowtham.s,Sub-Editor |23 April 2025 11:20 AM IST
ஆத்தூரில் இருந்து திருச்சி செல்லும் தனியார் பேருந்து அதிவேகமாக விபத்து ஏற்படும் அச்சத்தில் சென்றதால் மக்கள் பேருந்தை சிறை பிடித்து வாக்குவாதம்
அதிவேகமாக ஓட்டியதால் தனியார் பஸ் சிறைபிடிப்பு
ஆத்தூர்: ஆத்தூர் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து திருச்சி நோக்கி நேற்று மாலை 5:00 மணிக்கு தனியார் பஸ் சென்றுகொண்டிருந்தது. ஆனால் அதிவேகமாக விபத்து ஏற்படுத்தும் வகையில் ஓட்டிச் சென்றதால், பொதுமக்கள் பஸ்ஸை சிறைபிடித்து, ஓட்டுநரிடம் வாக்குவாதம் செய்தனர்.
சிறைபிடிப்பின்போது ஓட்டுநர் மக்களிடம், "ஆத்தூரில் இறந்தவரது ஊர்வலம் சென்றபோது நேரமாகிவிட்டதால் வேகமாக ஓட்டிவிட்டேன். இனி சீரான வேகத்தில் இயக்கப்படும்" என உறுதியளித்தார். அவரது விளக்கத்தைத் தொடர்ந்து, பொதுமக்கள் பஸ்ஸை விடுவித்து செல்ல அனுமதித்தனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu