காலை பள்ளிக்கு சென்ற மாணவன் காணவில்லை

காலை பள்ளிக்கு சென்ற மாணவன் காணவில்லை
X
வீட்டை விட்டு வெளியே சென்ற மாணவன் வீடு திரும்பாததால் போலீசார் மாணவனைத் தேடி விசாரணை மேற்கொண்டனர்

கவுந்தப்பாடியில் 14 வயது சிறுவன் மாயம்

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகேயுள்ள சிறுவலூர் சாலையைச் சேர்ந்த பிரபு என்பவரது மகன் ஆதிகேசவ் (வயது 14), பெருந்துறையில் உள்ள ஒரு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து முடித்துள்ளார். தற்போது பத்தாம் வகுப்புக்கான சிறப்பு பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு வந்தார்.

நேற்று முன்தினம் காலை, பள்ளிக்கு செல்கிறேன் என கூறி வீட்டை விட்டு வெளியே சென்ற ஆதிகேசவ், அந்த நாளிலிருந்து வீடு திரும்பவில்லை. பலமுறை எதிர்பார்த்தும் வராத நிலையில், பெற்றோர் பள்ளியை தொடர்பு கொண்டு விசாரித்தனர். அப்போது, அவர் அன்று பள்ளிக்கே வரவில்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து, மிகுந்த அதிர்ச்சியும் கவலையிலும் உள்ள தந்தை பிரபு, கவுந்தப்பாடி காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்தார். போலீசார் மாணவனைத் தேடி விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

மாணவன் காணாமல் போன சம்பவம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள், காவல் நிலையத்தை உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags

Next Story