சேலம் மூதாட்டியின் கைபேசி பறிப்பு மூவர் கைது

மூதாட்டியிடம் மொபைல் பறித்த மூவர் கைது – சேலத்தில் போலீசார் அதிரடி
சேலம் எருமாபாளையத்தை சேர்ந்த பாப்பு (வயது 60) என்ற மூதாட்டி, நேற்று காலை 9:30 மணியளவில் தனது வீட்டருகே மொபைல் போனில் பேசிக்கொண்டே நடந்து சென்றபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் திடீரென மொபைலை பறித்து தப்பியோடினர்.
பாப்பு அளித்த புகாரின் அடிப்படையில், கிச்சிபாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அருகிலுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் சன்னியாசிகுண்டு பகுதியை சேர்ந்த விஷால் (20), வாழப்பாடியை சேர்ந்த தமிழரசு (21) மற்றும் பூலாவரியை சேர்ந்த குரு (20) என தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து, போலீசார் மூவரையும் கைது செய்து, பறிக்கப்பட்ட மொபைல் போனை மீட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu