ஏலச்சீட்டு ஏமாற்றம் - ஒரே குடும்பம் ஒரு கோடி மோசடி! இளைஞர் கைது!

ஏலச்சீட்டு ஏமாற்றம் - ஒரே குடும்பம் ஒரு கோடி மோசடி! இளைஞர் கைது!
X
ஈரோடு மாவட்டத்தில் ஏலச்சீட்டு மோசடியில் பல லட்சம் ரூபாயை அபகரித்த வழக்கில், நீதிமன்றத்தில் சரணடைந்த நபரை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

ஈரோட்டில் ஏலச்சீட்டு மோசடி:

ஈரோடு மாவட்டத்தில் ஏலச்சீட்டு மோசடியில் பல லட்சம் ரூபாயை அபகரித்த வழக்கில், நீதிமன்றத்தில் சரணடைந்த நபரை போலீசார் கஸ்டடியில் எடுத்து தீவிர விசாரணை நடத்தும் திட்டத்தில் உள்ளனர்.

ஈரோடு, கொங்கம்பாளையத்தை சேர்ந்த அழகர்சாமி (வயது 46), பைனான்ஸ் மற்றும் ஏலச்சீட்டு தொழிலை மேற்கொண்டு வந்தார். அவரது மகளான மாரியம்மாள் (26) இத்தொழிலில் பங்குதாரராக இருந்தார். கடந்த 2019-ம் ஆண்டு, பெரியசேமூர் பகுதியை சேர்ந்த பாலு மற்றும் குமார் ஆகியோர், தலா ரூ.5.25 லட்சம் செலுத்தி ஏலச்சீட்டில் இணைந்தனர்.

ஏலச்சீட்டு முடிவடைந்தபோதும், அழகர்சாமி தொகையை வழங்கவில்லை. இதனால், அவரிடம் மேலும் தனியாக ரூ.5.25 லட்சம் செலுத்திய பாலுவுக்கு, தந்தை மகள் இணைந்து காசோலைகள் வழங்கினர். இதில், குமாருக்கான காசோலையில் பணம் கிடைத்தாலும், பாலுவுக்கு பணம் கிடைக்காததால், அவர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

விசாரணையில், அழகர்சாமி மற்றும் மாரியம்மாள், அரசு அனுமதி இல்லாமல் ஏலச்சீட்டு நடத்தி, பாலுவிடம் மட்டும் ரூ.7,49,500 மற்றும் மேலும் 40க்கும் மேற்பட்டவர்களிடம் ஒரு கோடியே ரூபாய் வரை மோசடி செய்தது அம்பலமானது.

இதனைத் தொடர்ந்து, மாரியம்மாள் கடந்த பிப்ரவரி 10ம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த அழகர்சாமி சமீபத்தில் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தின் அனுமதியை கோரியுள்ளனர்.

Tags

Next Story