மதுபானங்கள் சட்ட விரோதமாக விற்பனை செய்தவர் கைது

ஈரோடு மாவட்டம் வீரப்பம்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக மதுபானங்களை விற்றதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து பெறப்பட்ட தகவலின்படி, கடந்த இரு தினங்களுக்கு முன், வீரப்பம்பாளையம் டாஸ்மாக் கடை அருகே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த ஒருவரை, வீரப்பன்சத்திரம் துணை ஆய்வாளர் (எஸ்.ஐ.) கணேசன் சந்தித்து விசாரித்துள்ளார். அவரிடம் நடைபெற்ற சோதனையில், 15 பிராந்தி மதுபான பாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. தொடர்ந்து நடந்த விசாரணையில், அவர் அந்த பகுதியில் வசிக்கும் சின்னையன் (வயது 45) என அடையாளம் காணப்பட்டார். போலீசார் அவரிடம் இருந்த மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்ததுடன், அவரை கைது செய்து மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu