இது நியாயமா? – செலவுப் பஞ்சத்தில் ஜே.சி.பி. உரிமையாளர்கள் பாதை மறுப்பு!

இது நியாயமா? – செலவுப் பஞ்சத்தில் ஜே.சி.பி. உரிமையாளர்கள் பாதை மறுப்பு!
X
புதிய வாகனங்களின் உயர்ந்த விலை உள்ளிட்ட பல்வேறு செலவுகள் கட்டுப்பாடின்றி அதிகரிப்பதை எதிர்த்து, ஜே.சி.பி. உரிமையாளர்கள் தங்களது இயந்திரங்களை நிறுத்தி வேலைநிறுத்தத்தில் இறங்கினர்.

அந்தியூரில் ஜே.சி.பி. உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் – விலை உயர்வுகளை எதிர்த்து களம் இறங்கினர் :

அந்தியூர் அண்ணாமடுவில், டீசல் விலை, இயந்திர உதிரிப்பாகங்கள், இன்ஷூரன்ஸ் கட்டணம் மற்றும் புதிய வாகனங்களின் உயர்ந்த விலை உள்ளிட்ட பல்வேறு செலவுகள் கட்டுப்பாடின்றி அதிகரிப்பதை எதிர்த்து, ஜே.சி.பி. உரிமையாளர்கள் தங்களது இயந்திரங்களை நிறுத்தி வேலைநிறுத்தத்தில் இறங்கினர்.

இந்த போராட்டத்தில் 60க்கும் மேற்பட்ட ஜே.சி.பி.க்கள் பங்கேற்றுள்ளன. உரிமையாளர்கள் கூறுகையில், "இந்த விலை உயர்வுகள் நாங்கள் நடத்தும் தொழிலை சீர்குலைக்கின்றன. நாங்கள் குறைந்தபட்சமாக ஓய்வின்றி இயந்திரங்களை இயக்கினும், லாபமில்லாமல் கடனில் மூழ்குகிறோம்" என்றனர். இந்த வேலைநிறுத்தம் நாளை வரை தொடரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story