/* */

துபாயில் ஜனவரி மாதம் சர்வதேச தமிழ் தொழில் முனைவோர் மாநாடு

துபாயில் ஜனவரி மாதம் சர்வதேச தமிழ் தொழில் முனைவோர் மாநாடு நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

துபாயில் ஜனவரி மாதம் சர்வதேச தமிழ் தொழில் முனைவோர் மாநாடு
X

தொழில் முனைவோர் மாநாடு தொடர்பாக  நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றவர்கள்.

துபாயை மையமாக கொண்டு செயல்படும் தமிழ் தொழில் முனைவோர் கூட்டமைப்பின் மாநாடு வரும் ஜனவரி மாதம் நடை பெறவுள்ளது.எக்ஸ்போ 2020 நடைபெற்று வரும் நிலையில் இந்த மாநாட்டின் மூலம் சுமார் 5,000 கோடிக்கு மேல் தமிழகத்தில் முதலீடு செய்ய தொழில் முனைவோர்களிடம் ஒப்பந்தம் கையெழுத்து ஆக உள்ளது.

இது தொடர்பான ஆலோனை கூட்டம் துபாய் நாட்டின் இந்திய துணை தூதரக அதிகாரி காளிமுத்துவுடன் நடைபெற்றது . இதில் டி.இ.பி.ஏ அமைப்பின் தலைவர் பால் பிரபாகரன், அமைப்பின் இந்திய ஆலோசகர் டாக்டர் ஷானவாஸ்கான், தமிழக அரசின் தொழில் துறை சிறப்பு அதிகாரி பால் அருண், டாம் பிசினஸ் தலைவர் ஷானவாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் சர்வதேச அளவில் தொழில் முனைவோர் கலந்து கொள்கின்றனர். முன்னதாக தமிழக அரசு தொழில் துறை சிறப்பு அதிகாரிகள் பால் அருணுடன் ஆலோசனை நடைபெற்றது. இந்த மாநாட்டின் மூலம் தமிழகத்தில் புதிய தொழில் வாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Updated On: 8 Dec 2021 3:55 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. காஞ்சிபுரம்
    45 ஆண்டு பழமை வாய்ந்த 30 டன் எடையுள்ள அரச மரம் மீண்டும் நடவு
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் ஒரு வாரமாக தொடரும் கோடை மழை: நேற்று 111.4 மி.மீ...
  6. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  10. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்