உணவகங்களில் மயோனைஸ் பயன்படுத்த தடை

பெருந்துறையில் உணவகங்களில் மயோனைஸ் பயன்பாடு குறித்து ஆய்வு:
பெருந்துறையில், பதப்படுத்தப்படாத பச்சை முட்டையால் தயாரிக்கப்படும் மயோனைஸ் பயன்பாட்டை தடுக்கும் நோக்கில், உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் சைவ, அசைவ உணவகங்கள் மற்றும் பாஸ்ட் புட் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது, எந்த ஓட்டலிலும் மயோனைஸ் பயன்பாடு கண்டறியப்படவில்லை.
அதே சமயம், உணவக உரிமையாளர்களுக்கு சைவ மயோனைஸ் பயன்படுத்துவது குறித்தும், சவர்மா, கிரில் சிக்கன், தந்தூரி சிக்கன் போன்ற அசைவ உணவுகளை நன்றாக வேக வைத்து, 4 மணி நேரத்திற்குள் விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர்.
ஆய்வின் போது, தடை செய்யப்பட்ட கேரி பேக் மற்றும் செய்திதாள்களில் உணவு பொருள் வைத்து வழங்கிய பேக்கரி உரிமையாளருக்கு ரூ.3,000 அபராதம், பாலிதீன் கவரில் உணவு பொருள் பேக் செய்த உணவக உரிமையாளருக்கு ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், தடை செய்யப்பட்ட மயோனைஸ் மற்றும் புகையிலை பொருள் விற்பனை அல்லது உணவு பொருளில் குறைபாடு இருந்தால், பொதுமக்கள் 94440-42322 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu