கடனுதவிக்கான டாம்கோ முகாம் தொடக்கம்

டாம்கோ சார்பில் கடனுதவிக்கான முகாம் – ஏப்ரல் 21 முதல் தொடக்கம்
ஈரோடு: தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாம்கோ) சார்பில், தனிநபர் கடன், கைவினைக் கலைஞர் கடன் மற்றும் சுயஉதவிக்குழு கடன் திட்டங்களுக்கான விண்ணப்பங்களை பெறும் முகாம்கள் எதிர்வரும் ஏப்ரல் 21ம் தேதி முதல் மாவட்டம் முழுவதும் நடைபெறவுள்ளன.
இந்த திட்டத்தில் கடன் பெற விரும்பும் நபர்கள், கீழ்க்கண்ட ஆவணங்களுடன் முகாம்களுக்கு நேரில் செல்ல வேண்டும்:
ரேஷன் கார்டு நகல்
ஆதார் அட்டை
இருப்பிடச் சான்று
ஜாதிச்சான்று
வருமானச் சான்று
தொழில் நுட்ப அறிக்கை
பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் – 4 பிரதிகள்
முகாம்கள் நடைபெறும் இடங்கள் மற்றும் தேதிகள்:
ஏப்ரல் 21: பி.பெ.அக்ரஹாரம் நகர கூட்டுறவு கடன் சங்கம், சத்தி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம்
ஏப்ரல் 22: நசியனூர் நகர கூட்டுறவு கடன் சங்கம், காஞ்சிகோவில், நல்லாம்பட்டி, பெரியபுலியூர், அந்தியூர், தாளவாடி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள்
ஏப்ரல் 23: காசிபாளையம், திண்டல் மலை, லக்காபுரம் புதூர் சங்கம், அவல்பூந்துறை, வடக்கு புதுப்பாளையம், பெரியகொடிவேரி கூட்டுறவு சங்கங்கள்
ஏப்ரல் 24: ஈரோடு வங்கி வளாகம், பவானி மற்றும் சத்தி நகர வங்கிகள்
இம்முகாம்கள் அனைத்தும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu