கோபி பாரியூரில் திருக்கல்யாண பவுர்ணமி விழா பெருமையுடன் துவக்கம்

அமரபணீஸ்வரர் கோவிலில் திருமண மகிமை! – திருக்கல்யாணம், தேரோட்டம், பக்திப் புனிதம் ஒரே சேரக் களைகட்டியது :
ஈரோடு மாவட்டம் கோபி அருகேயுள்ள பாரியூர் அமரபணீஸ்வரர் திருக்கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும் திருக்கல்யாணம் மற்றும் சித்ரா பவுர்ணமி தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இவ்விழா வாஸ்து சாந்தி நிகழ்வுடன், நேற்று முன்தினம் முறையாக துவங்கியது.
நேற்று காலை, திருக்கொடியேற்றத்துடன், விழா விமரிசையாக துவங்கியது. தொடர்ந்து, ஸ்வாமி புறப்பாடு, அஷ்டபலி, மற்றும் திருக்கல்யாண உற்சவம் பாரம்பரிய வழக்கப்படி சிறப்பாக நடைபெற்றது.
இந்த ஆன்மீக நிகழ்வில், பக்தர்கள் நூற்றுக்கணக்கில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இனி வரும் நாட்களில் தேரோட்டம், திருவீதிகளில் பவனி, தீப ஆராதனை, விஷேஷ பூஜைகள் நடைபெறவுள்ளன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu