ஆத்தூரில் மின் கம்பி தீப்பற்றி வீடு தீக்கிரையாகியது

ஆத்தூரில் மின் கம்பி தீப்பற்றி வீடு தீக்கிரையாகியது
X
சூறைக்காற்று விளைவாக மின்கம்பி உரசி தீப்பற்றி எறிந்த வீடு விரைந்து தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்

காற்றில் மின் கம்பி உரசி தீப்பற்றி கூரை வீடு சேதம்

ஆத்தூர், கோட்டையைச் சேர்ந்த 54 வயதான தே.மு.தி.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேசனின் கூரை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த வீட்டின் ஒரு பகுதியில் அவரது தாயார் அலமேலு தங்கியிருந்தார், மற்றொரு பகுதியில் வீட்டின் பழைய பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன.

நேற்று மதியம் சுமார் 1:00 மணியளவில் பலத்த சூறைக்காற்று வீசியபோது, மின் கம்பிகள் வீட்டின் கூரையில் உரசி தீப்பற்றியது. உடனடியாக அலமேலு பாதுகாப்பாக வெளியேறினார்.

சம்பவம் குறித்த தகவல் கிடைத்தவுடன், 10 நிமிடங்களுக்குள் ஆத்தூர் தீயணைப்புத் துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இருப்பினும், வீட்டின் மேற்கூரையும், பழைய பொருட்களும் தீயில் எரிந்து சேதமடைந்தன.

இந்த சம்பவம் குறித்து ஆத்தூர் டவுன் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
ai in future agriculture