ஈரோடில் அதிவேக கார் விபத்து – மளிகை கடை உரிமையாளர் உயிரிழப்பு!

ஈரோடில் அதிவேக கார் விபத்து – மளிகை கடை உரிமையாளர் உயிரிழப்பு!
X
உடனடியாக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஈரோடில் அதிவேக கார் மோதி விபத்து – கடைக்காரர் உயிரிழப்பு :

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கொங்கம்பாளையம், சத்தி மெயின் ரோடு பகுதியில் வசித்து வந்த மைக்கேல் தேவராஜ் (வயது 48) என்பவர், அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர். இவர் "நெல்லை கமலம் ஸ்டோர்ஸ்" என்ற பெயரில் மளிகை கடை நடத்தி வந்தார்.

கடந்த 15ம் தேதி மதியம், கனிராவுத்தர் குளம் சாலையில் தனது டூவீலரில் சென்று கொண்டிருந்தபோது, அதிவேகமாக வந்த ஓல்ஸ்வேகன் கார் திடீரென அவர் மீது மோதியது. விபத்தில் அவர் தலையில் கடும் காயம் பெற்றார்.

உடனடியாக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வீரப்பன்சத்திரம் போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story