நள்ளிரவில் பேக்கரி தீ பிடித்ததில் பேக்கரி உரிமையாளர் அதிர்ச்சி

X
By - Nandhinis Sub-Editor |6 May 2025 12:00 PM IST
பேக்கரியில் உள்ள பொருட்கள் மற்றும் உபகரணங்கள் சேதமடைந்து, சுமார் ₹1.20 லட்சம் அளவுக்குச் சிதைந்ததாக கூறப்படுகிறது.
சத்தியமங்கலத்தில் பேக்கரியில் தீவிபத்து :
சத்தியமங்கலம் அருகே எஸ்.ஆர்.டி. கார்னர் பகுதியில் அமைந்துள்ள ஒரு பேக்கரியில், நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது உள்ளே யாரும் இல்லாததால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
விபத்தை அறிந்த சத்தியமங்கலம் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தினர். இருப்பினும், பேக்கரியில் உள்ள பொருட்கள் மற்றும் உபகரணங்கள் சேதமடைந்து, சுமார் ₹1.20 லட்சம் அளவுக்குச் சிதைந்ததாக கூறப்படுகிறது.
மின் கசிவே தீ விபத்துக்கான காரணம் எனத் தெரிய வருகிறது. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu