நெசவாளர் சங்கங்களின் குற்றச் சாட்டு

சென்னிமலை நெசவாளர்கள் வேதனை
சென்னிமலை மற்றும் சுரகிரி பகுதிகளில் உள்ள கைத்தறி நெசவாளர்கள், சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 10% கூலி உயர்வை ஆழ்ந்த ஏமாற்றமாக வர்ணிக்கின்றனர்.
வாழ்வாதாரச் சிக்கல்களுக்கு தீர்வு இல்லாத இந்த உயர்வு, ஆண்டுதோறும் வரும் "பொதுவான கண்துடைப்பு அறிவிப்பு" என நெசவாளர் சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.
அவர்கள் கூறுவதாவது:
இன்று ஒரு குடும்பம் நடத்தக் கூட முடியாத அளவுக்கு செலவுகள் அதிகமாகிவிட்டன. இந்த சிறிய உயர்வில் காய்கறியே வாங்க முடியவில்லை. உண்மையான மாற்றம் வேண்டுமெனில், 20% கூலி உயர்வும், கூடுதல் செலவினங்களை அரசே ஏற்க வேண்டியதும் தேவை. மேலும், மழைக்கால நிவாரணத்திற்கான வாக்குறுதி கூட இன்னும் நிறைவேற்றப்படவில்லை,என குற்றம் சாட்டியுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu