மாணவர்களுக்கு தீ பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் ஏற்பாட்டில், ஏப்ரல் 14ஆம் தேதி முதல் தீ தொண்டு வாரம் ஆகக் கடைபிடிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாவட்டத்தில் தீயணைப்பு வீரர்கள் பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடம் தீ விபத்தின்போது எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
ஈரோடு பேருந்து நிலையத்தில் நேற்று, பயணிகள், டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் கடை உரிமையாளர்களுக்கு தீ பாதுகாப்பு குறித்த நோட்டீசுகள் வழங்கப்பட்டன. மேலும், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் தொடர்பாக அவசியமான தகவல்களும் பகிரப்பட்டது.
அதேபோல், ஈரோடு காளைமாட்டு சிலை அருகிலுள்ள ரயில்வே காலனி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், மாணவ, மாணவிகளுக்கு தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை தீயணைப்பு வீரர்கள் நேரில் ஒத்திகை மூலம் காட்டினர். மீட்பு பணிகளின் போது கவனிக்க வேண்டிய அம்சங்களும் விளக்கப்பட்டன.
அந்தியூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள மக்களுக்கு, தீ ஏற்பட்டபோது எவ்வாறு அணைக்க வேண்டும், சுயபாதுகாப்பு எப்படி மேற்கொள்ள வேண்டும் என பயிற்சிகள் அளிக்கப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்த நடவடிக்கைகள் மூலம், தீவிபத்து நேரத்தில் மக்கள் எளிதில் சரியான முறையில் பதிலளிக்கக் கற்றுக்கொள்வதற்கான ஒரு பயனுள்ள முயற்சியாக அமைந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu