பழனி பங்குனி உத்திரத்துக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

பழனி பங்குனி உத்திர விழா பாதுகாப்புக்காக ஈரோடு, பெருந்துறையிலிருந்து தீயணைப்பு வீரர்கள் சென்ரனர்
பழனியில் நாளை (ஏப்ரல் 11) நடைபெறவுள்ள பங்குனி உத்திரம் திருவிழாவை முன்னிட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டுவரும் சூழலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த விழாவில் ஏற்படக்கூடிய அவசர நிலைகளைக் கணித்துத் தீயணைப்பு மற்றும் மீட்பு நடவடிக்கையாக முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளுக்காக, ஈரோடு மற்றும் பெருந்துறை பகுதிகளில் இருந்து தலா ஒரு தீயணைப்பு வாகனம், மொத்தம் 20 தீயணைப்பு வீரர்களுடன் பழனிக்கு இன்று புறப்பட்டுச் செல்கிறது.
இந்த தீயணைப்பு குழுவினர், பழனியில் விழா நடைபெறும் பகுதிகளில் பணி நியமனம் செய்யப்பட்டு, சாத்தியமுள்ள தீ விபத்துகள் மற்றும் அவசரச் சூழ்நிலைகளுக்கு உடனடி பதிலளிக்கும் வகையில் தயார் நிலையில் இருக்கின்றனர். விழா முடிந்த பின், ஏப்ரல் 12ஆம் தேதி இந்த குழுவினர் மீண்டும் ஈரோடு மற்றும் பெருந்துறைக்கு திரும்பவுள்ளனர் என தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த முன்கூட்டிய பாதுகாப்பு நடவடிக்கை, விழா சிறப்பாகவும் பாதுகாப்பாகவும் நடைபெற வழிவகுக்கும் என நம்பப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu