ஆதித்தமிழர் பேரவை மீது விவசாய சங்கம் புகார்

ஆதித்தமிழர் பேரவை மீது விவசாய சங்கம் புகார்
X
இச்சம்பவம், விவசாயிகளிடையே பதட்டத்தை ஏற்படுத்தி, கொள்முதல் நடவடிக்கைகளில் இடையூறு ஏற்படுத்தும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்

ஈரோடு மாவட்டம், கொடிவேரி அணை – பவானி நதி பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சுபி தளபதி, ஈரோடு மாவட்ட கலெக்டருக்கும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளருக்கும் அனுப்பிய மனுவில் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை வாய்க்கால் பகுதிகளில், தற்போது நெல் அறுவடை நடைபெற்று வருகிறது. விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய, அரசு நிர்வாகத்தினால் டிஜிபிசி (DPC) கொள்முதல் நிலையங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், நஞ்சை புரியம்பட்டியில் அமைந்துள்ள ஒரு அரசு நெல் கொள்முதல் நிலையத்திற்கு, வீலரில் வந்த, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஆதித்தமிழர் பேரவை கட்சியினரைச் சேர்ந்த சிலர், பணம் கோரி, அங்கு பணியாற்றும் பில் கிளர்க்கை மிரட்டியதாக கூறப்பட்டுள்ளது. அதிகாரிகள் இதற்கு பதிலளிக்க, இது ஒரு அரசு நிறுவனம், எனவே நிதி வழங்க இயலாது ஆதித்தமிழர் பேரவை மீது விவசாய சங்கம் புகார் அளித்தனர் என கூறியுள்ளனர்.

சம்பவத்தின் செய்தி அறிந்த விவசாய சங்க நிர்வாகிகள், தங்களின் மொபைலில் வீடியோ பதிவு செய்ததையடுத்து, சம்பந்தப்பட்டவர்கள் அங்கிருந்து விலகி சென்றுள்ளனர்.

இந்த நிலையில், இத்தகைய அச்சுறுத்தும் செயல்களை மேற்கொள்ளும் அடாவடி குழுவினருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க ஈரோடு மாவட்ட நிர்வாகம் கையாள வேண்டும் என அவர் மனுவில் வலியுறுத்தியுள்ளார்.

Tags

Next Story