சாலையோர குப்பைகளால் சுகாதாரச் சீர்கேடு

சாலையோர குப்பைகளால் சுகாதாரச் சீர்கேடு
கரூர் அருகிலுள்ள வாங்கப்பாளையம் முதல் அரசு காலனி வரை உள்ள சாலைகளின் ஓரங்களில், சீரற்ற முறையில் குப்பைகள் தேங்கிக் கிடப்பதால், சுற்றுச்சூழலும், பொதுசுகாதாரமும் மோசமடைந்து வருகிறது. அரசு காலனி பகுதியில் சாலையோரங்களில் அடிக்கடி குப்பைகள் குவிந்து கிடப்பதாகவும், இதனால் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உருவாகியுள்ளதாகவும், பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர்.
மாநகராட்சி அதிகாரிகள், இங்கு குப்பைகள் கொட்டக் கூடாது என பல்வேறு இடங்களில் எச்சரிக்கை பலகைகள் வைத்திருந்தாலும், அவை மக்களின் கவனத்தை பெறவில்லை. சிலர், அங்கங்கே குப்பைகளை கொட்டி விட்டு போவதுடன், அதை எரிப்பதும் வழக்கமாகி விட்டது. இதனால் எழும் புகை, சாலையில் செல்வோர் மற்றும் அருகிலுள்ள வீடுகளில் வசிப்போருக்கு பெரும் அவதியாக இருக்கிறது.
இவ்வாறு நிர்வாகத்தின் துஸ்திரியினால் சுகாதார சீர்கேடு உருவாகி, பொதுமக்கள் தினசரி அவதிப்படுகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu