ஈரோடு மாநகராட்சி சாதனை

ஈரோடு மாநகராட்சி ஒரே நாளில் ரூ.21 லட்சம் வரி வசூல்
ஈரோடு: 2025-26 நிதியாண்டுக்கான முதல் அரையாண்டு வரியை முன்பே செலுத்தும் குடியிருப்பாளர்களுக்கு 5% ஊக்கத்தொகை வழங்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்ததை தொடர்ந்து, பொதுமக்களில் வரி செலுத்தும் ஆர்வம் பெரிதளவில் அதிகரித்துள்ளது.
இதனையடுத்து, மாநகராட்சியின் வரி வசூல் மையங்களில் வருகை தரும் மக்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. குறிப்பாக, நேற்று முன்தினம் மட்டும், மாநகராட்சியின் ஒன்பது வரி வசூல் மையங்களில் 1,500க்கும் மேற்பட்ட நபர்கள் வருகைதந்து, மொத்தமாக ரூ.21 லட்சத்திற்கும் மேல் வரியை செலுத்தினர் என்று வருவாய் மற்றும் வரிப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வரி வசூல் நிலவரம், நகராட்சியின் செயல்திறனை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu