சேலத்தில் ஓடும் பஸ்சில் இருந்து 9 மாதக் குழந்தை விழுந்து உயிரிழப்பு - டிரைவர், கண்டக்டர் பணிநீக்கம்!

சேலத்தில் ஓடும் அரசு பஸ்சில் இருந்து 9 மாதக் குழந்தை விழுந்து உயிரிழப்பு :
தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜதுரை மற்றும் முத்துலட்சுமி தம்பதியினர், தங்கள் 7 வயது மகளும் 9 மாத ஆண் குழந்தையான நரணிஷையும் உடன் கொண்டு, கோவைக்கு திரும்பும் பயணத்தில், சேலத்தில் இருந்து கோவை செல்லும் அரசு பேருந்தில் ஏறினர். பேருந்து சங்ககிரி அருகே வலையக்கரனூர் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, இரவு 10:15 மணியளவில், டிரைவர் திடீரென பிரேக் போட்டதால், ராஜதுரை தன்னுடைய குழந்தையை பிடித்து வைத்திருந்த நிலையில் நிலைதடுமாறி, குழந்தை பஸ்சின் முன்பக்க திறந்த கதவு வழியாக சாலையில் விழுந்தது. குழந்தை தலையில் கடுமையான காயம் அடைந்தது.
உடனடியாக குழந்தையை அருகிலுள்ள குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால், மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, ராஜதுரை தேவூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பேருந்தின் கதவு திறந்த நிலையில் இயக்கப்பட்டதற்காக, டிரைவர் சிவன்மணி மற்றும் கண்டக்டர் பாலநிசாமி ஆகியோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் .
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu