சேலத்தில் சிலுவை ஊர்வலம்

சேலம் 4வது ரோட்டில் உள்ள குழந்தை இயேசு பேராலயத்தில், புனித வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நடைபெற்ற சிலுவை பாதை ஊர்வலம் பக்தி, ஆன்மீகம், உணர்வுடன் சிறப்பாக நடைபெற்றது. பங்குத்தந்தை ஜோசப் லாசர் தலைமையில் அரிசிப்பாளையம் தூய மரியன்னை பள்ளி வளாகத்தில் இருந்து ஊர்வலம் தொடங்கப்பட்டது. இயேசு வேடமணிந்த ஒருவர், தலையில் முள் கிரீடம் அணிந்து, தோளில் சிலுவையை சுமந்துகொண்டு, கல்வாரி மலையை நோக்கி செல்லும் இயேசுவின் துன்பங்களை தத்ரூபமாக நடித்து காட்டினர். வழியிலே நடந்த முக்கிய நிகழ்வுகளும் உணர்ச்சிவசப்படுத்தும் வகையில் காட்சியளிக்கப்பட்டன. ஊர்வலம் குழந்தை இயேசு பேராலயத்தில் நிறைவடைந்தது. பின்னர் காலை 11 மணி முதல் 3 மணி வரை தியானம் மற்றும் சிலுவைப்பாடு நடைபெற்றது. இதேபோல், சேலம் மற்றும் அருகிலுள்ள பல தேவாலயங்களில் சிலுவை பாதை ஊர்வலம், சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. பக்தர்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டு இயேசுவின் துன்பங்களை நினைவு கூர்ந்தனர். நாளை ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலிகள் மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற உள்ளன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu