புதுசத்திரத்தில் மாடுகள் விற்பனை உயர்வு

X
By - Gowtham.s,Sub-Editor |9 April 2025 2:30 PM IST
புது சத்திரத்தில் மாட்டுச்சந்தையில் மாடுகள் விற்பனை அமோகம்,ரூ.2.50 கோடிக்குமாடுகள் விற்பனை
ரூ.2.50 கோடிக்கு மாடுகள் விற்பனை
புதுச்சத்திரம் யூனியன் புதன்சந்தையில் செவ்வாய்கிழமை தோறும் மாட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது. அதிகாலை 4:00 மணிக்கு தொடங்கும் இந்த மாட்டுச்சந்தைக்கு புதுச்சத்திரம், வேலகவுண்டம்பட்டி, சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் தங்களது மாடுகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.
கடந்த இரண்டு வாரங்களாக வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மாட்டுச்சந்தைக்கு மாடுகளின் வரத்து கணிசமாக அதிகரித்திருந்தது. மேலும், நேற்று நடைபெற்ற மாட்டுச்சந்தைக்கு ஆந்திரா மற்றும் கேரளா மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் அதிக எண்ணிக்கையில் வந்திருந்ததால், மொத்தமாக ரூ.2.50 கோடி மதிப்பிற்கு மாடுகள் விற்பனையாகியுள்ளன.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu