தம்மம்பட்டியில் தேனீக்கள் தாக்கி மக்கள் அவதி

தம்மம்பட்டியில் தேனீக்கள் தாக்கி மக்கள் அவதி
X
தம்மம்பட்டியில் உள்ள பாலத்தின் வழியே சென்ற மக்களை தேனீக்கள் கொட்டி வேதனையை ஏற்படுத்தியது

தம்மம்பட்டி மேம்பாலத்தில் தேனீக்கள் தாக்கி 50 பேருக்கு காயம்

தம்மம்பட்டி பஸ் ஸ்டாண்ட் அருகே சுவேத நதியைக் கடக்கும் மேம்பாலத்தின் அடிப்பகுதியில் உள்ள தேனீக் கூட்டிலிருந்து நேற்று மாலை 5:00 மணியளவில் திடீரென தேனீக்கள் வெளியே வந்து, அவ்வழியே பைக், சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் சென்றவர்களைத் தாக்கின. இந்தத் தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.

இந்தச் சம்பவத்தில் காந்தி நகரைச் சேர்ந்த கவுரி (34), உலிபுரம் கார்த்திக் (31), ரஞ்சித்குமார் (28), தம்மம்பட்டி மணி (25), விஜயகுமார் (42), ஸ்ரீராம் (17), ஆகாஷ்ராஜா (14), முத்துமணிகண்டன் (14), நாகியம்பட்டி முரளிபிரசாத் (9) உள்ளிட்ட 10 பேர் கடுமையாகக் காயமடைந்து தம்மம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர். இதுதவிர மேலும் 20 பேர் முதலுதவி சிகிச்சை பெற்றுச் சென்றனர்.

அதேவேளை, ஓமலூர் பெரியேரிப்பட்டியில் உள்ள பூதனூர் அய்யனாரப்பன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று காலை அமரகுந்தி சொக்கநாதர் கோவிலில் இருந்து தீர்த்தக்குடம் ஊர்வலம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்ற இந்த ஊர்வலம் பெரியேரிப்பட்டி சாலையில் சென்றபோது, திடீரென பறந்து வந்த தேனீக்கள் பக்தர்களைத் தாக்கின.

இதனால் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் பதறியடித்து ஓடினர். இந்தத் தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். சிலருக்கு முகத்தில் கொட்டியதால் வீக்கம் ஏற்பட்டது. அரை மணி நேரத்திற்குப் பின் மீண்டும் ஊர்வலம் புறப்பட்டு கோவிலை அடைந்தது.

பக்தர்கள் கூறுகையில், 'தேன் கூட்டின் மீது இளைஞர்கள் கல் வீசியதால், தேனீக்கள் பறந்து வந்து தாக்கியுள்ளன' என்று தெரிவித்தனர்.

இருசம்பவங்கள் குறித்தும் தம்மம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story