42 வயது வியாபாரி உடலுறுப்புகள் தானம்-மரணம் தாண்டிய மனிதநேயம்

42 வயது வியாபாரியின் உயிரின் ஒரு பகுதி பலருக்குப் புதிய வாழ்வு
அந்தியூர் அருகே சந்தியபாளையத்தைச் சேர்ந்த அரிசி வியாபாரி சரவணன் (வயது 42), கடந்த மாதம் 29ம் தேதி பவானிக்குச் செல்லும் வழியில் பைக்கில் சென்றபோது திடீரென தடுமாறி விழுந்தார். உடனடியாக ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
மருத்துவ பரிசோதனைகளில், அவர் மூளைச்சாவுக்கு ஆளானது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவரது குடும்பத்தினர் மகத்தான முடிவெடுத்து உடலுறுப்புகள் தானத்திற்கு ஒப்புதல் வழங்கினர். தோல், கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் நோயாளிகளுக்கு நலமளிக்கும் நோக்கில் பெறப்பட்டன.
சரவணனின் உடல் நேற்று அவரது சொந்த கிராமத்தில் இறுதி அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, அந்தியூர் தாசில்தார் கவியரசு, ஆர்ஐ செந்தில்ராஜா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அவருக்கு மனைவி குணசுந்தரி, 14 வயது மகன், 12 வயது மகள் உள்ளனர். அவரது தன்னலமற்ற தானம் பல உயிர்களுக்கு நம்பிக்கையை வழங்கியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu