சத்தியமங்கலத்தில், இலவச வீட்டு வசதி கோரி ஏழை மக்கள் மனு!

இலவச வீடு வேண்டி பொதுமக்கள் மனு - அரசு நலத் திட்டத்தில் அடங்க வேண்டும் என கோரிக்கை :
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், பலரும் நலத்திட்ட வீடுகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் மனுக்கள் அளித்தனர். குறிப்பாக, ஏழ்மை, ஆதரவற்ற நிலை, நிலம் இல்லாதவர்கள் போன்ற பலரும் “நாம் வீடு, நம்ம ஊர்” திட்டம் மற்றும் அரசு வீட்டு வசதிக் கீழ் இலவச வீடுகள் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
மனுக்களை மாவட்ட நிர்வாக அதிகாரிகள், கிராம நிர்வாக அதிகாரிகள், மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பெற்றுக்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். நிலம் இல்லாத குடும்பங்களுக்கான பட்டா வழங்கல், வீட்டு வசதி திட்டத்தில் இவர்களைச் சேர்த்தல் போன்றவை குறித்தும் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. வீடில்லாமல் வாடும் ஏழை மக்களுக்கு இது ஒரே நம்பிக்கை என அவர்கள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu