அங்கன்வாடியில் வேலை வாய்ப்பு

ஈரோடு மாவட்டத்தில் அங்கன்வாடி பணியிடங்களுக்கு நேரடி நியமனம் – பெண்களுக்கு சிறந்த வேலைவாய்ப்பு வாய்ப்பு
ஈரோடு மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் பராமரிப்பு மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் 91 அங்கன்வாடி பணியாளர், 12 குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் 36 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இப்பணியிடங்களுக்கு முற்றிலும் நேரடி நியமனம் நடைபெறவுள்ளதால், தகுதியான பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். விண்ணப்பதாரர்கள் www.icds.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, ஏப்ரல் 24ம் தேதிக்குள் (மாலை 5:00 மணி வரை) சமர்ப்பிக்க வேண்டும்.
கல்வித்தகுதி
அங்கன்வாடி பணியாளர் – பிளஸ் 2 தேர்ச்சி
குறு அங்கன்வாடி பணியாளர் – 10ம் வகுப்பு தேர்ச்சி
அங்கன்வாடி உதவியாளர் – எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்
வயது வரம்பு
பொது விண்ணப்பதாரர்கள்: 25 முதல் 35 வயது வரை
விதவைகள் / கணவரால் கைவிடப்பட்டவர்கள்: 40 வயதுக்குள்
மாற்றுத் திறனாளிகள்: 43 வயதுக்குள்
தகுதி உடையவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு சமூக சேவையில் ஈடுபடலாம்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu