கோவில் சுவர்களுக்கு கரி எடுக்காமல், சுத்தமான தீபத்துடன் வழிபாடு அறிவுரை
சுகவனேஸ்வரர் கோவிலில் நெய் தீபம் மட்டும் ஏற்ற அறிவுரை
சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு வந்து செல்கின்றனர். பக்தர்கள் அம்மன் சன்னதி, தட்சிணாமூர்த்தி, முருகன், விநாயகர், நவக்கிரகங்கள் முன்பு தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கம்.
இதற்காக பக்தர்கள் தங்கள் வீடுகளில் இருந்து தீப எண்ணெயை கொண்டு வருவதோ, கோவில் முன்பு விற்கப்படும் அகல் விளக்குகளை வாங்கி ஏற்றுவதோ செய்கின்றனர்.
ஆனால் பல்வேறு வகையான எண்ணெய் தீபங்களால் கோவில் சுவர்கள், பழமையான சிற்பங்கள் மற்றும் கருவறை சிலைகள் மீது கரி படிந்து அழுக்கு ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தடுக்கும் நோக்கில் அறநிலையத்துறை சார்பில் கோவில்களில் நெய் தீபம் மட்டுமே ஏற்ற வேண்டும் என்ற அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவுறுத்தலுக்கு இணங்க, சுகவனேஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது. இதில், கடந்த ஏப்ரல் 1 முதல் பக்தர்கள் சுத்தமான நெய் தீபம் மட்டுமே ஏற்றி வழிபட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu