மேட்டூர் அரசு கலைக்கல்லூரியில் சேர்க்கை 27ம் தேதி வரை மட்டுமே

மேட்டூர் அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைமுறையில் – மே 27 வரை விண்ணப்பிக்கலாம்
மேட்டூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை மே 7ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. இந்த சேர்க்கை வரும் மே 27ஆம் தேதி வரை நடைபெறும் என கல்லூரி முதல்வர் திருப்பதி (பொறுப்பாளர்) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
மாணவர்கள் [www.tngasa.in](http://www.tngasa.in) என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரியில் கல்லூரியின் குறியீட்டு எண் **1031015** என்பதை தேர்வு செய்து பி.ஏ. தமிழ், ஆங்கிலம், பொருளியல், பி.காம்., வணிகவியல், பி.எஸ்சி. கணிதம், புவியமைப்பியல், கணினி அறிவியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஊரக பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் சிரமமின்றி விண்ணப்பிக்க, கல்லூரியில் சிறப்பு மாணவர் சேர்க்கை உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையம் அரசு விடுமுறை நாட்கள் தவிர, ஒவ்வொரு நாளும் காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu