கீறல் விழுந்த நான்ஸ்டிக் பான்களின் பயங்கர விளைவு! கீறல் பாத்திரங்களை உடனே மாற்றுங்கள் – நிபுணர்கள் எச்சரிக்கை!

கீறல் விழுந்த  நான்ஸ்டிக் பான்களின் பயங்கர விளைவு! கீறல் பாத்திரங்களை உடனே மாற்றுங்கள் – நிபுணர்கள் எச்சரிக்கை!
X
தற்போதைய ஆய்வுகள் படி, ஒரு சிறிய கீறலால் கூட அந்த பாத்திரத்திலிருந்து 9,000-க்கும் அதிகமான மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் வெளியேறும்.

கீறல் விழுந்த நான்ஸ்டிக் பான்களின் பயங்கர விளைவு :

நவீன சமையலறைகளில் இன்று பெரும்பாலும் பயன்படுத்தப்படும் நான்ஸ்டிக் டெஃப்லான் (Non-stick Teflon) பான்கள், சீரான சமைப்பு வசதிக்கு அறிகுறியாக மாறியுள்ளன. ஆனால், இந்த பாத்திரங்கள் மீது கீறல்கள் ஏற்படும்போது, அது பாதுகாப்பானதா என்பது பெரும் கேள்வி.

தற்போதைய ஆய்வுகள் படி, ஒரு சிறிய கீறலால் கூட அந்த பாத்திரத்திலிருந்து 9,000-க்கும் அதிகமான மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் வெளியேறும். இந்த துகள்கள் உணவில் கலந்து, மனித உடலுக்குள் செல்லும் அபாயம் இருக்கிறது. மேலும், பாத்திரம் முழுவதுமாக சேதமடைந்தால், 2.3 மில்லியன் மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் நம் உணவில் கலந்து விடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

இந்த துகள்கள் மூளையை பாதிப்பது, நுரையீரல் செயல்பாட்டை குறைப்பது, ஹார்மோன் மாறுபாடுகள், மேலும் புற்றுநோயை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளதென மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

அறிவுரை:

பயன்பாட்டில் கீறல்கள் விழுந்த நான்ஸ்டிக் பாத்திரங்களை உடனடியாக மாற்றுங்கள். சூரிய கம்பிகள், கிராணைட் அல்லது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் போன்ற பாதுகாப்பான மாற்றுகள் குறித்து பரிசீலிக்கலாம்.

Tags

Next Story