குடிநீர் இணைப்பு துண்டிப்பு குறித்து மனு

குடிநீர் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையை கண்டித்து மனு – ஈரோடு கலெக்டரிடம் மக்கள் நல்வாழ்வு சங்கம் புகார்
ஈரோடு : வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கத்தின் செயலாளர் பாரதி தலைமையில், கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம் மனு அளிக்கப்பட்டது. அதில், ஈரோடு மாநகராட்சியில் சொத்து வரி செலுத்தும் இறுதி நாள் மார்ச் 31 என நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், அதற்கு முன்பே சில அதிகாரிகள் கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
முன்னறிவிப்பு இல்லாமல் JCB வாகனத்தின் உதவியுடன் கட்டடத்தின் வாயிற்படி இடிக்கப்பட்டது, குடிநீர் குழாய்கள் முற்றிலும் துண்டிக்கப்பட்டன, வீட்டிற்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இது போன்ற செயல்கள் பொதுமக்களிடையே கோபத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பல ஆண்டுகளாக வரி பாக்கி வைத்துள்ளவர்களிடம் மட்டுமே சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஒரே மாதம் தாமதமானவர்களிடமிருந்து கூடுதல் கட்டணம் வசூலிப்பது ‘கந்துவட்டி’ போல செயல்படுவதாகவும், இந்த பிழைகளைச் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் மனுவில் வலியுறுத்தப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu