ரூ.2.5 லட்சம் திருட்டு, சிசிடிவி காட்சியில் அம்பலமான பரபரப்பு

ரூ.2.5 லட்சம் திருட்டு, சிசிடிவி காட்சியில் அம்பலமான பரபரப்பு
X
ஆத்தூரில் விவசாயியின் பைக் பையில் இருந்த ரூ.2.5 லட்சத்தை மோட்டார் சைக்கிள் கும்பல் திருடியது, சிசிடிவி ஆதாரத்தில் குற்றவாளிகள் கைது

ரூ.2.50 லட்சம் திருட்டு: பெரம்பலூர் வாலிபர் கைது

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே கருப்பன்சோலை பகுதியில் வசிக்கும் விவசாயி பாலாஜி (வயது 36), கடந்த 2ம் தேதி தம்மம்பட்டியில் உள்ள வங்கியில் இருந்து விவசாயக் கடனாக பெற்ற 4 லட்சம் ரூபாயை பைக்கின் டேங்க் கவரில் வைத்து கொண்டு, உடையார்பாளையத்தில் உள்ள சொட்டு நீர் குழாய் விற்பனை கடைக்கு சென்றார். அப்போது, மர்ம நபர்கள் அவரது பைக்கில் இருந்த பணத்தில் ரூ.2.50 லட்சத்தை திருடிச்சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து தம்மம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அருகிலுள்ள ‘சிசிடிவி’ காட்சிகளை ஆய்வு செய்ததில், இரு நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து பணத்தை திருடியது தெரியவந்தது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த துரை (வயது 31) மற்றும் அன்பு ஆகியோர் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரியவந்தது. இதில் துரையை போலீசார் கைது செய்து, ரூ.2.50 லட்சம் பணத்தையும் மீட்டனர். அன்புவை கைது செய்யும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் பற்றி மேலும் தகவல் தேடவேண்டுமா?

Tags

Next Story