கல்லூரி மாணவிக்கு வீட்டிலேயே குழந்தை பிறந்த அதிர்ச்சி!

கல்லூரி மாணவிக்கு வீட்டிலேயே குழந்தை பிறந்த அதிர்ச்சி! சுகாதாரத்துறையினர் விசாரணையில் பெரும் பரபரப்பு :
ஈரோடு மாவட்டம் கோபியை அருகிலுள்ள சீதாம்மாள் காலனியில் வாடகை வீட்டில் வசித்து வந்த 19 வயது கல்லூரி மாணவிக்கு சமீபத்தில் வீட்டிலேயே குழந்தை பிறந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த மாணவி கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தவர் என தெரியவர, சுப்ரீத் என்ற நபர் அவரை தன் மனைவியென அறிமுகப்படுத்தி, அந்த பகுதியில் குடியிருந்துள்ளார்.
பிறந்த குழந்தைக்கு பிறகு ஏற்பட்ட ரத்தப்போக்கால் மாணவி கோபி நகரிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தகவல் அறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணையில் இறங்கினர். மாணவியின் பெற்றோரும் கோபியிலேயே வசிப்பவர்கள் என தெரியவந்த நிலையில், இந்த சம்பவம் பெற்றோர்களுக்கு அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu